(ரூபன்)
கோவிட் 19 தொடர்பில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் விழிப்புணர்வு நடவடிக்கை.
அமுலிலிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் திங்கட்கிழமை(23) காலை 6 மணிமுதல் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 நாட்களின் பின்னர் திறக்கப்பட்ட பொதுச் சந்தைகள், பொதுபோக்குவரத்துப் பகுதிகள், பொது இடங்கள், உள்ளிட்ட பல இடங்களுக்கும், இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் தலைவர் த.வசந்தராசாவின் தலைமையிலான தொண்டர் குழு நேரடியாகச் சென்று துண்டுப்பிரசுரங்களை வினியோகித்ததுடன், பதாகைகளையும் காட்சிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment