23 Mar 2020

கோவிட் 19 தொடர்பில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் விழிப்புணர்வு நடவடிக்கை.

SHARE
(ரூபன்) 

கோவிட் 19 தொடர்பில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் விழிப்புணர்வு நடவடிக்கை.
கோவிட் 19 எனும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையினால் திங்கட்கிழமை (23) மாவட்டம் பூராகவும் இடம்பெற்றது.

அமுலிலிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் திங்கட்கிழமை(23) காலை 6 மணிமுதல் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 நாட்களின் பின்னர் திறக்கப்பட்ட பொதுச் சந்தைகள், பொதுபோக்குவரத்துப் பகுதிகள், பொது இடங்கள், உள்ளிட்ட பல இடங்களுக்கும், இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் தலைவர் த.வசந்தராசாவின் தலைமையிலான தொண்டர் குழு நேரடியாகச் சென்று துண்டுப்பிரசுரங்களை வினியோகித்ததுடன், பதாகைகளையும் காட்சிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.













SHARE

Author: verified_user

0 Comments: