1 Feb 2020

அடி நிலைக் கிராம மட்டங்களில் பெண்களின் நிலை மாற வேண்டும் மாவட்ட பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி மயூரி ஜனன்.

SHARE
அடி நிலைக் கிராம மட்டங்களில் பெண்களின் நிலை மாற வேண்டும் மாவட்ட பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி மயூரி ஜனன்.
சமுதாயத்தில் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டுமாக இருந்தால் அடி நிலைக் கிராம மட்டங்களில் பெண்களின் நிலை மாற வேண்டும் என மட்டக்களப்பு  மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி மயூரி ஜனன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் செயற்பட்டு வரும் கிராம மட்ட பெண்கள், யுவதிகளைக் கொண்ட செயற்குழுக்களுக்கான விழிப்புணர்வுப் பயிற்சி நெறி தன்னாமுனை மியானி பயிற்சி நிலையத்தில் வியாழக்கிழமை 30.01.2020 அந்நிறுவனத்தின் மாவட்ட உதவி இணைப்பாளர் ஸ்ரீகாந்த் தர்சினி தலைமையில் இடம்பெற்றது.

அங்கு பயனாளிகளிகளான பெண்கள், யுவதிகள் மத்தியில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,  அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி மயூரி பெண்கள் கிராம மட்டங்களில் காணப்படும் பிரச்சினைகளை முன்னுரிமை அடிப்படையில் அடையாளம் காண்பதில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

அவ்வாறு அடையாளம் கண்ட பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய மூலங்களை அடையாளம் காண்பதும் முக்கியமாகும்.

சமகால அரசியல் பொருளாதார போக்குகள் தொடர்பாகவும் பெண்களும் யுவதிகளும்  அறிவு பெற்றிருக்க வேண்டும்.

பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான சட்டத்தின் பாதுகாப்பையும் பெண்கள் அறிந்திருப்பது அவசியமாகும்.

மனித உரிமைகள், பெண்கள் உரிமைகள், சிறுவர் உரிமைகள், அடிப்படை உரிமைகள் உட்பட அனைத்து வகை  சட்டப் பாதுகாப்புப் பற்றிய விழிப்புணர்வுகளையும் பெற்றிருக்க வேண்டும்.

அதனடிப்படையிலேயே மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 10 பிரதேச செயலாளர் பிரிவுகளைத் தேர்ந்;தெடுத்து மிகவும் அடி நிலையில் பாதிக்கப்பட்ட கிராமங்களாக இனம் கண்டு கொண்ட கிராமங்களில் 165 கிராம மட்டக் குழுக்களை உருவாக்கியுள்ளது. அதில் பெண்களும் யுவதிகளுமாக 2595 உறுப்பினர்கள் செயற்பட்டு வருகின்றார்கள்.

பெண்களை ஆற்றல் மிக்க குழுக்களாக நிலைப்படுத்துவதே எமது மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் இலக்காகும்” என்றார்.


SHARE

Author: verified_user

0 Comments: