19 Feb 2020

மக்களுக்கு வருகின்ற அபிவிருத்திகளை சுயலாபத்திற்காக தடுத்து நிறுத்துவது ஏற்புடையதல்ல - இரா.சாணக்கியன் தெரிவிப்பு.

SHARE
மக்களுக்கு வருகின்ற அபிவிருத்திகளை சுயலாபத்திற்காக தடுத்து நிறுத்துவது ஏற்புடையதல்ல - இரா.சாணக்கியன் தெரிவிப்பு.
மக்களுக்கு வருகின்ற அபிவிருத்திகளை தடுத்து நிறுத்துவது ஏற்புடையதல்ல என இராசாமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கோவில்போரதீவு உதயதாரகை விளையாட்டு கழகத்திற்கு காற்பந்தாட்ட பாதணிகள் புதன்கிழமை (19) வழங்கி வைத்து விட்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

அரசியலில் வாக்களிப்பது, ஆதரவு தெரிவிப்பது என்பதெல்லாம் ஜனநாயகம். அதற்கும் மக்களுக்கு வருகின்ற அபிவிருத்திக்கான நிதிகளையும் இடைநிறுத்துவது என்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. உதயதாரகை விளையாட்டு கழக மைதானத்திற்கு ஒதுக்கப்பட்ட இரண்டு மில்லியன் நிதித்தொகை அரசியல்வாதியொருவரின் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என்பது கவலைக்குரிய விடயம். இவ்வாறான செயற்பாடுகளை அரசியல் வாதிகள் செய்வதை நிறுத்தி பாரபட்சம் பார்க்காமல் அனைவருக்கும் அபிவிருத்தி சென்றடைய வேண்டுமென்ற மனநிலைக்கு மாற்றமடைய வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட கழக உறுப்பினரும், பட்டிருப்பு கல்வி வலய உடற்கல்வி உதவி கல்வி ப்பணிப்பாளர் ரி.தயகுமார் மற்றும் கழக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


SHARE

Author: verified_user

0 Comments: