23 Feb 2020

மட்டக்களப்பில் சாரணர் இயக்கத்தின் தந்தை பேடன் பவுலின் 163வது ஜனன தின நிகழ்வு. உலக சாரணர் இயக்கத்தின் தந்தை பேடன் பவலின் 163வது ஜனன தின நிகழ்வு சனிக்கிழமை 22.02.2020 மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது.

SHARE
மட்டக்களப்பில் சாரணர் இயக்கத்தின் தந்தை பேடன் பவுலின் 163வது ஜனன தின நிகழ்வு.
உலக சாரணர் இயக்கத்தின் தந்தை பேடன் பவலின் 163வது ஜனன தின நிகழ்வு சனிக்கிழமை 22.02.2020 மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது.
நீருற்றுப் பூங்காவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தேசிய கொடியும் சாரணர் கொடியும் ஏற்றப்பட்டு தேசிய கீதத்தோடு நிகழ்வுகள் ஆரம்பமாகின.

அதனையடுத்து சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் பேடன் பவலின் உருவச்சிலைக்கு மாலை அணிவத்து சாரணர் தொடர்பான கருத்துரைகளும், நற்சிந்தனைகளும் வருகை தந்த பிரமுகர்களால் தெரிவிக்கப்பட்டது,

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா, கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் எஸ்.நவநீதன், மாவட்ட சாரணர் ஆணையார் பிரதீபன் புனித மிக்கேல் கல்லூரி, மெதடிஸ்த மத்திய கல்லூரி, வின்சென்ற் மகளிர் தேசியப் பாடசாலை, புனித சிசிலியா தேசியப் பாடசாலை, சாரணர் குழு, சிவானந்தா தேசியப் பாடசாலை ஆகியவற்றின் குருளைச் சாரணர்கள். இளைஞர்கள் சாரணர்கள், பெண் சாரணர்கள், திரி சாரணர்கள் உட்பட சாரண ஆசிரியர்கள் அடங்கலாக சுமார் 200 சாரணர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.



















SHARE

Author: verified_user

0 Comments: