மட்டக்களப்பு மாவட்ட உழவர் பொங்கல் விழா வவுணதீவில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் 14 பிரதேச செயலகங்களும் இணைந்து நடாத்திய பொங்கல் விழா
மட்டக்களப்பு
மாவட்ட செயலகமும் 14 பிரதேச செயலகங்களும் இணைந்து நடாத்திய மாவட்ட தைப்பொங்கல் விழா
இவ்
வருடம் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவிலுள்ள ஈச்சந்தீவு கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் வெள்ளிக்கிழமை (17ம் திகதி) மாவட்ட
அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இத்தைப்பொங்கல்
விழாவினை சிறப்பிப்பதற்காக மாவட்டத்தின் 14 பிரதேசசெயலக பிரிவுகளையும் சேர்ந்த பிரதேசசெயலாளர்கள், மண்முனை மேற்கு பிரதேச சபை தவிசாளர், மற்றும் திணைக்களத்தலைவர்கள் , கிராம அபிவிருத்தி சங்கத்தின் பிரதிநிதிகள், விவசாய அமைப்புக்கள், சமுர்த்தி சங்கங்கள், அரச திணைக்கள உத்தியோகத்தர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து
கொண்டிருந்தனர்.
வவுணதீவு
பிரதேச செயலகப்பிரிவிலுள்ள ஈச்சந்தீவு கண்ணகி அம்மன் ஆலயமானது மிக பழைமைமிக்க ஆலயமாதலால் இவ்வாலய முன்றலிலே இப்பொங்கல் விழாவினை நடாத்துவதற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் மிகச்சிறப்பாக ஒழுங்கமைத்து காலை 6 மணியளவில் இவ்விழா மாட்டு வண்டில்களின் பண்பாட்டு பவனியுடன் ஆரம்பிக்கப்பட்டதனைத் தொடர்ந்து நெல் அறுவடை நிகழ்வும் நடைபெற்றது.
தொடர்ந்து,
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பாரம்பரிய முறையில் அரிசி குற்றி பொங்கல் பொங்கியதுடன், பாரம்பரியமான வாழ்கை முறையினை பிரதிபலிக்கின்ற வீடுகளும் மக்கள் பார்வைக்காக அமைக்கப்பட்டிருந்தன.
இப்பொங்கல்
விழாவின் போது 15 பொங்கல் பானைகள் வைக்கப்பட்டு பொங்கல் பொங்கி விசேட பூசை வழிபாடுகள் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment