மட்டக்களப்பு குழு மோதலில் முச்சக்கரவண்டி தீ வைத்து எரிப்பு மூவர் வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயம்.
மட்டக்களப்பை அண்டியுள்ள இருதயபுரம் பகுதியில் இடம்பெற்ற இளைஞர் குழு மோதலில் முச்சக்கரவண்டி ஒன்று முற்றாகத் தீக்கிரையாக்கப்பட்டதோடு மூவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவான இருதயபுரம் மேற்கு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 29.12.2019 இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சூப் கடை ஒன்றிற்கு வந்த இளைஞர் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் இறுதியில் வாள்வெட்டில் முடிவடைந்ததோடு முச்சக்கரவண்டிக்கும் தீவைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தீவிரமானதையடுத்து ஏற்பட்ட பதற்றநிலைபற்றி பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் கூழாவடி பகுதி இளைஞர் குழுவினரும் இருதயபுரம் மேற்கு பகுதி இளைஞர் குழுவினரும் தப்பித் தலைமறைவாகி விட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment