24 Dec 2019

கொக்கட்டிச்சோலையில் சஞ்சிகை வெளியீடு.

SHARE
கொக்கட்டிச்சோலையில் சஞ்சிகை வெளியீடு.

மண்முனை தென்மேற்கு பிரதேச சபையினால் செவ்வாய்க்கிழமை (24) “படுவான் ஒளி” சஞ்சிகை வெளியீடு செய்து வைக்கப்பட்டது.
சஞ்சிகையின் முதற்பிரதியை சபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம், மட்டக்களப்பு மாவட்ட உள்ளராட்சி உதவி ஆணையாளர் சி.பிரகாஸ்க்கு வழங்கி வெளியீட்டு வைத்தார்.
தொடர்ந்து சபையின் உறுப்பினர்கள், சஞ்சிகைக்கான ஆக்கங்கள் வழங்கியோர்களுக்கும் சஞ்சிகை வழங்கி வைக்கப்பட்டன.

தேசிய வாசிப்பு மாதத்தினை சிறப்பித்து இச்சிறப்பு மலர் வெளியீடு செய்யப்பட்டது.
பிரதேசசபையின் வரலாறு, சபையினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள், பிரதேச வரலாற்று விடயங்கள், கவிதைகள் என்பவற்றை இச்சஞ்சிகை உள்ளடக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கதிரவன் த.இன்பராசா நூலுக்கான நயவுரையை நிகழ்த்தியதுடன், மாவட்ட உள்ளராட்சி உதவி ஆணையாளர், சபை உறுப்பினர்கள், நுண்கலைத்துறை விரிவுரையாளர் சு.சந்திரகுமார், சபையின் உத்தியோகத்தர்கள், எழுத்தாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.



SHARE

Author: verified_user

0 Comments: