அச்சுறுத்தலாக இருந்துவந்த முதலை மடக்கிப்பிடிக்கப்பட்டது.
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அமிர்தகழி பகுதியில் உள்ள வாவியில் அச்சுறுத்தலாக காணப்பட்ட முதலைகளில் ஒன்று பொதுமக்களால் சனிக்கிழமை (09) இரவு 11.00 மணி அளவில் மடக்கிப்பிடிக்கப்பட்டது.
கடந்த காலத்தில் மட்டக்களப்பு பகுதியில் முதலைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் நடமாடும் வீதியில் 12 அடி நீளமான முதலை வீதியில் நாயை பிடித்த நிலையில் ஓடிச் சென்று அருகில் உள்ள மாட்டுக் கொட்டகைக்குள் புகுந்து கொண்டது.
அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களால் சுமார் 30 நிமிடம் போராடி முதலையை உயிருடன்பிடித்தனர். இதையடுத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த வனத்துறையினர் பிடிபட்ட முதலையை வனத்துறை ஊழியர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்
0 Comments:
Post a Comment