16 Nov 2019

மட்டக்களப்பில் காலை 7 மணி முதல் 11 மணிவரை 22.49 வீத வாக்களிப்பு.

SHARE
மட்டக்களப்பில் காலை 7 மணி முதல் 11 மணிவரை 22.49 வீத வாக்களிப்பு.
இலங்கையில் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் சர்வசன வாக்கெடுப்பு திட்டமிட்டபடி இன்று சனிக்கிழமை காலை  7 மணி முதல் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காலை 7 மணிமுதல் முற்பகல் 11 மணிவரை மாவட்டத்தில் 22.49 வீதமாக வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மாணிக்கம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள கல்குடா தேர்தல் தொகுதியில் காலை 7 மணிமுதல் 11 மணிவரையில் 22.49 வாக்களிப்பும், மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 22.01 வீத வாக்களிப்பும், பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் 23. வாக்களிப்பும் இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE

Author: verified_user

0 Comments: