16 Nov 2019

மட்டக்களப்புமாவட்டத்தில் இன்றயதினம் 22 தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு

SHARE
மட்டக்களப்புமாவட்டத்தில் இன்றயதினம் 22 தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு.இலங்கையின்சோசலிச குடியரசின் இன்றைய தேர்தலானது மட்டக்களப்பு மாவட்டத்தில் திருப்திகரமான முறையில்ஏற்பாடு செய்தமைக்கமைவாக சுமூகமான முறையில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவத்தாட்சிஅலுவலர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.மட்டக்களப்புமாவட்டத்தில் 428 வாக்களிப்பு நிலையங்களிலும் 398301 வாக்காளர்கள் வாக்களித்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில்இன்றைய தினம் 22 தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும்  அதற்கான விசாரணைகள் பொலிஸாருடன் இணைந்துநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போதுகல்குடா தேர்;தல் தொகுதியில் 22.45 வீதம் வாக்களிக்கப்பட்டுள்ளதாகவும் அதே போன்றுமட்டக்களப்பு தேர்;தல் தொகுதியில் 22.01 வீதம் வாக்களிக்கப்பட்டுள்ளதாகவும் அதேபோன்று பட்டிருப்பு தேர்;தல் தொகுதியில் 23.48 வீதம் வாக்களிக்கப்பட்டுள்ளதாகவும் ஒட்டுமொத்தமாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 22.49 வீதமான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளது.இப் பதிவுகள் யாவும் 11.00 மணிக்கு முன்னர் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.இன்றையதினம் 22 தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும்  அதற்கான விசாரணைகள் பொலிஸாருடன் இணைந்து நடவடிக்கைஎடுக்கப்பட்டு வருவதாக  அவர் மேலும்தெரிவித்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: