29 Sept 2019

காட்டுக்கு வேட்டைக்குச் சென்றபோது கட்டுத்துவக்கு வெடித்ததில் சிறுவன் பலி.

SHARE
காட்டுக்கு வேட்டைக்குச் சென்றபோது கட்டுத்துவக்கு வெடித்ததில் சிறுவன் பலி.
மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டிய கித்துள் வனப்பகுதிக்குள் கட்டுத் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் சிறுவன் ஒருவன் பலியாகியுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

சனிக்கிழமை மாலை 28.09.2019 இடம்பெற்ற இச்சம்பவத்தில் கித்துள் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்தன் தனு (வயது 14 ) என்ற சிறுவனே பலியாகியுள்ளார்.

கட்டுத்துப்பாக்கி சகிதம் சகபாடிகளான நான்கு பேர் கித்துள் வனப்பகுதிக்குள் மிருக வேட்டைக்குச் சென்றிருந்தபோது காட்டு விலங்குக்கு குறி வைத்த துப்பாக்கிச் சூடு குழுவினரில் ஒருவராக நின்றிருந்த சிறுவன் மீது பட்டுள்ளது.

படுகாயமடைந்த சிறுவனை கரடியானாறு பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்து பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்த நிலையில் சிறுவன் அங்கு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் பற்றி கரடியனாறு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு கட்டுத்துப்பாக்கி கொண்டு காட்டு விலங்கு வேட்டையில் ஈடுபட்ட நபர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: