10 Jul 2019

2 கைக்குண்டுகள், 63 தோட்டாக்கள் மீட்பு

SHARE
2 கைக்குண்டுகள், 63 தோட்டாக்கள் மீட்பு.
ஏறாவூர் பொலிஸ் பிரிவு முகாந்திரம் வீதியை அண்டி உள்ள வீடொன்றின் நீர்த்தாங்கியிலிருந்து கைக்குண்டுகள் 2, துப்பாக்கித்  தோட்டாக்கள் 63 என்பன  செவ்வாய்க்கிழமை (09.07.2019)  மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய இவை மீட்கப்பட்டுள்ளன.

விசேட அதிரடிப்படையினர், இரானுவத்தினர் பொலிஸார் ஆகியோர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.

மீட்கப்பட்ட கைக்குண்டை ஏறாவூர் புன்னக்குடா பகுதியிலுள்ள சன நடமாட்டம் அற்ற இடத்திற்கு விசேட அதிரடிப்படையினரால் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு வைத்து செயலிழக்கச் செய்யப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





SHARE

Author: verified_user

0 Comments: