23 Jun 2019

ஜனாதிபதி செயலக ஏற்பாட்டில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற புண்ணியகர்ம நிகழ்வு.

SHARE
ஜனாதிபதி செயலக ஏற்பாட்டில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற புண்ணியகர்ம நிகழ்வு.
மட்டக்களப்பு மாவட்ட செயலக முன்றலில்  சனிக்கிழமை (22) மாலை 6 மணியளவில் ஜனாதிபதி செயலக ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் நாட்டிற்கு இறையாசி வேண்டி இடம்பெற்ற புண்ணியகர்ம நிகழ்வு உணர்வு பூர்வமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றது.

இங்கு இலங்கை தாய்க்கு எதுவித அச்சுறுத்தலும் இனிமேல் இடம்பெறகூடாதென 21 தடைவை சத்தியப்பிரமாண நிகழ்வும் மும்மத தலைவர்களின் ஆசிர்வாத உரையும் உயிரிழந்தவர்களுக்கு ஆத்ம சாந்தி வேண்டி 2 நிமிட மௌன அஞ்சலியும் ஈகைச் சுடர் ஏற்றியும் வழிபாடுகளும் நினைவுரைகளும் இங்கு இடம்பெற்றன.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டு மாவட்ட அரசாங்க அதிபர் மா. உதயகுமார் கலந்து கொண்டார். மற்றும் மும்மதத் தலைவர்கள் மாவட்ட செயலக தி;ட்டமிடல் பணிப்பாளர் கணக்காளர் உயர் அதிகாரிகள் ஊழியர்கள் எனப்பலரும் இவ் புண்ணிய கர்ம நிகழ்வில் கலந்துகொண்டனர்.  
















SHARE

Author: verified_user

0 Comments: