மட்டக்களப்பு சேயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு, அதனால் ஏற்பட்ட உயிர்ப்பலிகளையடுத்து மட்டக்களப்பு நகரில் பொலிஸ், இராணுவம், விஷேட அதிரடிப்படையின் ஆகியோரைக் கொண்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நகரை நெருங்கும் சந்தேகத்திற்கிடமான வாகனங்களும் நபர்களும் ஆங்காங்கே சோதனைக்குள்ளாக்கப்படுவதுடன் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கிழக்கில் யுத்தம் முடிவடைந்த கடந்த 2007 ஆம் ஆண்டிற்குப் பின்னர் வீதிகளில் படையினர் குவிக்கப்பட்டிருப்பதும் சோதனைக் கெடுபிடிகள் ஆரம்பித்திருப்பதும் கடந்த 12 ஆண்டுகளில் இதுவே முதற் தடவையாகும்.
நிலைமை சுமுகமாக இருந்த போதிலும் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துபோயுள்ளார்கள்.
0 Comments:
Post a Comment