28 Feb 2019

பாதையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் சில நிமிட நேரத்தில் மாயம்

SHARE
பாதையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் சில நிமிட நேரத்தில் மாயம்.
பாதையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் சில நிமிட நேரத்தில் மாயமான சம்பவம் பற்றி முறையிடப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

எரிக்கிலம்காட்டுப்பாலத்தடி, மூர்க்கர்கல் எனும் வயல் பிரதேசத்தில் புதன்கிழமை 27.02.2019 இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மீராவோடையைச் சேர்ந்த இலவத்தம்பி முஹம்மத் அஸ்லம் என்பவர் தனக்குச் சொந்தமான டீனுலு 7186 எனும் இலக்கம் கொண்ட கறுப்புற நிற பல்ஸர் மோட்டார் சைக்கிளில் பிற்பகல் 2.30 மணியளவில் மூர்க்கர்கல் பகுதிக்குச் சென்றுள்ளார்.

அங்கு பாதையோரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்த அவர், ஆற்றுப் பக்கமாகச் சென்று விட்டு சில நிமிட நேரம் கழித்து தனது மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு வந்து பார்த்தபோது அவ்விடத்தில் மோட்டார் காணாமல் போயிருந்தது.

சுற்றியிருந்த காட்டுப் பக்கமாகவும் வயல் பக்கமாகவும் தேடிப் பார்த்தபொழுதும் மோட்டார் சைக்கிளைக் கண்டு பிடிக்க முடியவில்லை என்று தனது பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் பற்றி வாழைச்சேனைப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு;ள்ளனர்.
SHARE

Author: verified_user

0 Comments: