யுத்தத்தின் போது கணவனை இழந்த குடும்பத்திற்கு வாழ்வாதார உதவி வழங்கி வைப்பு.
கடந்த யுத்தத்தின்போது பாதிப்புற்று தனது கணவனை இழந்து வசித்து வரும் மட்டக்களப்பு புன்னக்குளம் என்னும் கிராமத்தைச் சேரந்த ஒரு குடும்பத்திற்கு 30000 ரூபா பெறுமதியான தையல் இயந்திரம் ஒன்று வெள்ளிக்கிழமை (01) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
TORONTO BLUES FOUNDATION அமைப்பின் அனுசரணையில் மட்டக்களப்பில் அமைந்துள்ள மீழொழி மக்கள் அமைப்பினூடாக இவ்வுதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதனை ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டு.அம்பாறை மாவட்ட பொறுப்பாளர் நா.நகுலேஸ் மற்றும் மீழொழி அமைப்பின் தலைவர் தீபன் கலந்துகொண்டு வழங்கி வைத்தார்கள்.
0 Comments:
Post a Comment