கடந்த யுத்தத்தின்போது பாதிப்புற்று தனது கணவனை இழந்த 2 பிள்ளைகளுடன் வசித்து வரும் வழைச்சேனை, சுங்காங்கேணிக் கிராமத்தைச் சேரந்த ஒரு குடும்பத்திற்கு 30000 ரூபா பெறுமதியான ஆடுகள் திங்கட்கிழமை (14) மாலை வழங்கி வைக்கப்பட்டுள்ளது. TORONTO BLUES FOUNDATION அமைப்பின் அனுசரணையில் மட்டக்களப்பிலுள்ள மீழொழி மக்கள் அமைப்பினூடாக இவ்வுதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதனை மீள் ஒளி மக்கள் அமைப்பினூடாக இவ்வுதவி வழங்கி வைக்கப்பட்டது. இதனை ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டு.அம்பாறை மாவட்ட பொறுப்பாளர் நா.நகுலேஸ் கலந்துகொண்டு வழங்கி வைத்தார்.
TORONTO BLUES FOUNDATION அமைப்புக்கு இதற்கான நிதி உதவியை கனடாவில் வசிக்கும் சமூகசேவையாளரான ஜெயக்கண்ணன் கந்தசாமி என்பவர் வழங்கியுள்ளார்.
0 Comments:
Post a Comment