14 Jan 2019

மட்டக்களப்பு மாவட்டத்தில் பலத்த மழை

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை பெய்து வருகின்றது. ஞாயிற்றுக் கிழமை இரவிலிருந்து திங்கட்கிழமை காலை வரையில் பலத்த மழை பெய்து வருகின்றது. 
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து திங்கட் கிழமை காலை 8.30 மணிவரையிலாக கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவு மழை வீழழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பத்திகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்தார்.

அந்த வகையில் மட்டக்களப்பு நகரில் 83.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், நவகிரி பகுதியில் 105.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், தும்பன்கேணி பகுதியில் 122.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், மைலம்பாவெளி பகுதியில் 52.3 மில்லி  மீற்றர் மழை வீழ்ச்சியும், உன்னிச்சை பகுதியில்  41.0 மில்லி மீற்றர் மழை  வீழ்ச்சியும்,  வாகனேரி பகுதியில் 5.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உறுகாமம் பகுதியில் 43.6 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும்,  கிரான் பகுதியில்  20.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும்,  கல்முனை  பகுதியில் 97.9 மில்லி மீற்றர்  மழை வீழ்ச்சியும், பதிவாகியுள்ளதாக கே.சூரியகுமாரன் மேலும் தெரிவித்தார்.

களுவாஞ்சிகுடி கிராமத்தின் தாழ் நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதனால் அப்பகுதியில் அமைந்துள்ள தோணாவை வெட்டுவதற்குரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் களுவாஞ்சிகுடி வட்டார உறுப்பினர் மே.வினோராஜ் தெரிவித்தார்.

மழை காரணமாக தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதையும் அதானிக்க முடிகின்றது. செவ்வாய்க்கிழமை தைப் பொங்லைக் கொண்டாடவுள்ள இந்நிலையில் கடும் மழை பெய்து வருவதானல் வியாபார நடவடிக்கைகளுகம் இஸ்த்தம்பிதம் அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது இவ்வாறு இருக்க முறையான வடிகாலமைப்பு வசத்தியின்மை காரணமாக தொற்றுக்களும், நுளம்புகளும் பரவக்கூடியதாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

SHARE

Author: verified_user

0 Comments: