11 Jan 2019

பொதுப் போக்குவரத்தை தடை செய்யும் வகையில் பிரதான வீதியில் டயர் எரித்த குற்றச்சாட்டில் இருவர் கைது

SHARE
பொதுப் போக்குவரத்தை தடை செய்யும் வகையில் பிரதான வீதியில் டயர் எரித்த குற்றச்சாட்டில் இருவர் கைது.
பொதுப் போக்குவரத்தை தடை செய்யும் வகையில் மட்டக்களப்பு –கல்முனை  பிரதான வீதி நாவற்குடா பகுதியில் டயர் எரித்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை பகலளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் நாவற்குடா பகுதியைச் சேர்ந்த இருவரே சந்தேகத்தின் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

பிரதேச மக்கள் கொடுத்த  தகவலின் பிரகாரமே இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இது பற்றிய மேலதிக விசாரணைகளில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

SHARE

Author: verified_user

0 Comments: