வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடையில் புதன்கிழமை 16.01.2019 பிற்பகல் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்களான 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டதோடு கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் கத்தியையும் முச்சக்கரவண்டியையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீராவோடை கிராமத்தைச் சேர்ந்த சனூஸ் முஹம்மத் ஸக்கீர் (வயது 16) என்பவரே கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது. இளைஞர் அணிகளுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் கூரிய கத்தியினால்; குத்தப்பட்டதில் மேற்படி இளைஞர் பலியாகியுள்ளார்.
படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் தோய்ந்து கிடந்த இளைஞனை சந்தேக நபர்களே தாங்கள் பயணம் செய்த முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்று வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் கிடத்தி விட்டுத் தலைமறைவாகிய நிலையில் தேடுதலின்போது நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் இருவர் சகோரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்லப்பட்ட இளைஞனின் சடலம் சட்ட வைத்திய அதிகதாரியின் உடற்கூறாய்வு அறிக்கைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம்பற்றி வாழைச்சேனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment