23 Dec 2018

மட்டக்களப்புமாவட்டத்திற்கான“Excellent Performance” தேசியவிருது

SHARE
மட்டக்களப்பு மண்முனைப் பற்று பிரதேச செயலகத்தில் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் உ.சுரேஸ்குமார்  “லக் ரெகியா ஹரசர “Excellent Performance” தேசிய விருதினைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
இவருக்கு இவ்விருது மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறந்த சேவையை வழங்கியதற்காக .தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சின் அனுசரணையுடன் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தினால் இவ்விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள் மடத்தை சேர்ந்த இவர் கலைமாணி பட்டம் பெற்று பின்னர் தொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை டிப்ளோமாவினை முடித்துவிட்டு சிறத்த சேவையினை மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்கு ஆற்றிவருவதுடன் மாவட்டத்தின் சிறந்த தொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை வளவாளராகவும் தனது கடமையினை சகல மாவட்டங்களுக்கும் வழங்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


SHARE

Author: verified_user

0 Comments: