8 Dec 2018

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் இளைஞர் அணிக்கான தேர்தல்.

SHARE
இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் இளைஞர் அணிக்கான தேர்தல்.

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் இளைஞர் அணிக்கான தேர்தல் சனிக்கிழமை (08) அச்சங்கத்தின் மாவட்டக் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
இதன்போது 60 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். ஆனாலும் இத்தேர்தலில் 45 பேர் கலந்து கொண்டு எதிர்வரும் 2 ஆண்டுகளுக்கான தமது பிரதிநிதிகளைத் தேர்வு செய்தனர்.

இதன்போது தலைவராக சா.காணுசுதனும், உபதலைவராக றிப்கி முகமட்டும், செயலாளராக ம.பிரியங்கனும், பொருளாளராக இ.விதுர்சனும், தெரிவு செய்யப்பட்டதுடன், உறுப்பினர்களாக மேலும் 6 பேரும் தெரிவு செய்யப்பட்டனர்.

இன்று தெரிவு செய்யப்பட்ட இச்செயற்குழு எதிர்வரும் 2 வருடங்களுக்கு செயலிலிருக்கும்.

இதன்போது இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் தலைவர் த.வசந்தராசா, செயலாளர் சா.மதிசுதன், பெருளாளர் வ.சக்திவேல், கிளைநிறைவேற்று உத்தியோகஸ்த்தர் வி.பிறேமகுமார், செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமைக் காரியாலயத்தில் கடமைபுரியும் நிறுவன அபிவிருத்திக்கான உத்தியோகஸ்த்தர் பிறேமலால், மற்றும் செஞ்சிலுவைத் தொண்டர்கள், அங்கத்தவர்கள், இளைஞர் யுவதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.


























SHARE

Author: verified_user

0 Comments: