25 Dec 2018

துறைநீலாவணை பிரதானவீதியில் பொருத்தப்பட்டிருந்த தெருவிளக்குகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

SHARE
(விஜி)

துறைநீலாவணை பிரதானவீதியில் பொருத்தப்பட்டிருந்த தெருவிளக்குகள்  சேதப்படுத்தப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டம் துறைநீலாவணை கிராமத்திற்கு செல்லும் பிரதானவீதியில் பொருத்தப்பட்டிருந்த தெருவிளக்குகள் இனம்தெரியாத சிலரால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை (25) பகல் இட்மபெற்றுள்ளது. துவிச்சக்கர வண்டியில் வந்த சில இளைஞர்கள் எறிந்து சேதப்படுத்தியுள்ளார்கள். இதனால் 3 தெருவிளக்குகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு சேதப்படுத்திய இளைஞர்களை வீதியில் பயணித்த பொதுமக்கள், ஆட்டோச்சாரதிகள் நேரில் கண்டுள்ளனர். இவர்களை அடையாளப்படுத்த விரைந்த பொதுமக்களை ஏமாற்றிட்டு மருதமுனை கிராமத்திற்குள் அவர்கள் ஓடியுள்ளார்கள்.

தேசிய சகவாழ்வு, அரச கருமமொழிகள் நல்லிணக்கம் அமைச்சின் நிதி உதவியில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையால் இவ்வருட ஆரம்பப் பகுதியில் இந்த தெருவிளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன.

துறைநீலாவணை கிராம பொதுமக்களினதும், பிரயாணிகளினதும், நன்மைக்காக பொருத்தப்பட்ட தெருவிளக்குகளை சேதப்படுத்தியது சம்பந்தமாக சம்மந்தப்பட்டவர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என துறைநீலாவணை கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


SHARE

Author: verified_user

0 Comments: