12 Dec 2018

சூட்சுமமான முறையில் வான் ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டன.

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிசார் புதன்கிழமை (12) மூன்றே முக்கால் (3.3/4) கிலோ கிராம் எடையுள்ள கேரள கஞ்சாவைக் கைப்பற்றியுள்ளனர்.
மட்டக்களப்பு பகுதியிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த கே.டி.எச். ரக வாகனத்தில் மிகவும் சூட்சுமமான முறையில் கொண்டு செல்லப்பட்ட கேரளக் கஞ்சாவை இவ்வாறு களுவாஞ்சிகுடியில் வைத்து கைக்கற்றப்பட்டதுடன், சந்தேகத்தின் பேரில் 4 பேரும் ஒரு கே.டி.எச். ரக வானும் கைப்பற்றப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நால்வரும் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, அகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

SHARE

Author: verified_user

0 Comments: