7 Nov 2018

காட்டு யானை தாக்கி விவசாயி பலி

SHARE
காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை 06.11.2018 அதிகாலை இடம்பெற்றுள்ளது.

பொத்துவில் - 7, நூறானிய்யா வீதியைச் சேர்ந்த அலியார் அபூசாலி (வயது 56) என்பவரே பொத்துவில் தகராம்பளை பகுதியில் வைத்து காட்டு யானையால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் மீட்கப்பட்டு உடற் கூறாய்வு பரிசோதனைகளுக்காக பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ‪

SHARE

Author: verified_user

0 Comments: