15 Nov 2018

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை மிகவும் ஆர்வத்துடனும் விணைத்திறனுடனும் மக்களுக்குரிய சேவை ஆற்றிவருகின்றது.

SHARE
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை மிகவும் ஆர்வத்துடனும் விணைத்திறனுடனும் மக்களுக்குரிய சேவை ஆற்றிவருகின்றது.
பல வருடங்களுக்கு பின்னர் உருவாக்கப்பட்ட மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையானது மிகவும் ஆர்வத்துடனும் விணைத்திறனுடனும் மக்களுக்குரிய சேவையை ஆற்றிவருகின்றது.

இதன் ஒரு அங்கமாக இவ்வருடம் சபைநிதி வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களை தவிசாளர் ஞா.யோகநாதன் நேரடியாக குருமண்வெளிக் கிராமத்திற்கு வியாழக்கிழமை (15) களவிஜயத்தை மேற்கொண்டு அபிவிருத்தி வேலைகளை பார்வையிட்டதுடன் அங்கு நடைபெறும் வேலைகள் தொடர்பாக பொதுமக்களுடனும், வேலையாட்களுடனும் கலந்துரையாடியதுடன் பொதுமக்களின் தேவைகளையும் கேட்டறிந்துள்ளார்.

பல வருடங்களுக்கு பின்னர் உருவாக்கப்பட்ட மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையானது மிகவும் ஆர்வத்துடனும் விணைத்திறனுடனும் மக்களுக்குரிய சேவையை ஆற்றிவருகின்றது.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை புதிதாக உருவாக்கப்பட்டதன் பின்னர்  மக்கள் பிரதிநிதிகள் ஆர்வத்துடனும் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதுடன் தேர்தல் காலத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறிதிகளை நிறைவேற்றி வருவதாக தவிசாளர் இதன்போது தெரிவித்தார்.

அந்த வகையில் குருமண்வெளி கிராமத்தில் உள்ள காளிகோவில் வீதியை  மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை நிதியில் இருந்து கொங்கீரிட்டு  (ஊழnஉசநவந) வீதி அமைப்பு வேலையானது பிரதேச சபை உறுப்பினர் மயில்வாகனம் இளங்கோவின் முயற்சியினாலும் நிதி ஓதுக்கீட்டின் மூலமும் செப்பனிட்டு வருவதை மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் ஞா. யோகநாதன், குருமண்வெளி வட்டார உறுப்பினர் மயில்வாகனம் இளங்கோ, மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மேற்பார்வை செய்வதுடன் அவ் வீதியில் உள்ள பொதுமக்களின் தேவைகளையும், குறைகளையும் கேட்டறிந்துள்ளார். 



SHARE

Author: verified_user

0 Comments: