1 Nov 2018

வறட்சி நிவாரண பயனாளிகளைக் கொண்டு வாகரையில் சிரமதானம்.

SHARE
சமீப காலங்களாக நிலவிய வறட்சியினால் பாதிக்கப்பட்ட வாகரைப் பிரதேசத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்கப்பட்ட வருகின்றது.
அந்த வகையில் வறட்சி நிவாரணம் பெறும் பயனாளிகள் தங்களது பங்களிப்பாக வாகரையிலுள்ள பொது இடங்களைச் சிரமதானம் செய்து வருகின்றனர்.

சிரமதானப் பணிகளில் வாகரையிலுள்ள கிராம உள் வீதிகள், வடிகான்கள், பொது மயானம், மத வழிபாட்டிடங்கள் என்பன தப்புரவு செய்யப்பட்டு வருகின்றன.

புதன்கிழமை 31.10.2018 வாகரை ஊரியன்கட்டு பிரதேசத்தில் இடம்பெற்ற சிரமதானப் பணிகளில் அப்பிரதேசத்தின் பொதுமக்கள் உட்பட கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் ரி. தினேஷ்‪, செயலாளர் கே. சஞ்சித், பொருளாளர் டபிள்யூ. றூபன், செயற்பாட்டாளர் ரீ.ஜீ. குருகுலசிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

SHARE

Author: verified_user

0 Comments: