மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குபட்பட்ட மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் முன்னால் வெள்ளிக்கிழமை (02) அதிகாலை பாரிய விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு பகுதியிலிருந்து கல்முனை நோக்கி பணித்த மீன் ஏற்றும் வட்டா ரக வாகனம் ஒன்று பிரதேச செயலகத்தின் முன்னாலுள்ள மின் கம்பத்தில் மோதியத்தில் இவ்விபத்துச் சம்பவம் சம்பவித்துள்ளது.
இதனால் அப்பகுதியில் மின்கம்பம் உடைந்து சேதமடைந்துள்ளதுடன், வாகனத்தின் மேற் பகுதியும் முற்றாக உடைந்து சேதமடைந்துள்ளது. மின்கம்பம் உடைந்து மின் கம்பிகள் துண்டிக்கப்பட்டுள்ளதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக் ப்பட்டுள்ளது.
வாகனத்தில் பயணித்த சாதிரதியும், உதவியாளரும் காயங்களுக்குள்ளான நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் சமம்பவ இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment