நாடாளாவிய ரீதியில் முஅத்தீன்கள் மற்றும் இமாம்களுக்கான இலவச உம்றா யாத்திரை வேலைத்திட்டத்தின் கீழ் புதன்கிழமை 04.05.2016 இலங்கையின் பல பாகங்களிலுமிருந்தும் தெரிவு செய்யப்பட்ட மேலும் 100 யாத்திரீகர்கள் வழியனுப்பி வைக்கப்பட்டனர்.
ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், மற்றும் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் அலுவல்கள் அமைச்சர் அப்துல் ஹலீம் ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வழியனுப்பி வழியனுப்பி வைத்தனர்.
ஏற்கெனவே முதலாவது தொகுதியில் 100 பேர் கொண்ட யாத்திரை அணியினர் அனுப்பப் பட்டிருந்தனர்.
மீதமுள்ள மேலும் 300 உம்றா யாத்திரிகள் ஜூன் மாதம் ஆரம்பமாகவுள்ள புனித றமழான் நோன்புக்கு முன்னர் உம்றாவுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா ஹிரா பவுன்டேஷன் ஏற்பாட்டில் 55 வயதுக்கு மேற்பட்ட முஅத்தீன்கள் மற்றும் இமாம்கள் 500 பேருக்கு இலவச உம்றா வேலைத்திட்டம் அமுலாகிறது.
“இதுவரைக் காலமும் உம்றா அல்லது ஹஜ் கடமையை செய்யாத உலமாக்கள் இருப்பார்களாயின் அவர்களுக்கு உம்றா ஏற்பாடுகளை செய்து கொடுக்க ஹிறா பவுன்டேஷன் முன்வந்துள்ளது. இச்சேவை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்” என்றார்.
0 Comments:
Post a Comment