7 May 2016

அம்பாறை மின்சார சபையின் பாவனையாளர் சேவை நிலையத்தில் நடைபெற்ற சித்திரை கலாசார விளையாட்டுப் போட்டி

SHARE
(க.விஜி)

அம்பாறை இக்கினியாகல மின்சார சபையின் பாவனையாளர் சேவை நிலையத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட சித்திரை கலாசார விளையாட்டுப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) அம்பாறை இக்கினியாகல விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. 
அம்பாறை இக்கினியாகல இலங்கை மின்சார சபை பாவனையாளர் சேவை நிலையத்தின் அத்தியட்சகர் எல்.ஏ.ரி.ஜீ. மதுசாங்க தலைமையில் நடைபெற்ற, இக்கலாச்சார போட்டியில் பாவனையாளர் சேவை நிலையத்தில் கடமை புரியும் ஊழியர்கள் ஊழியர்களின் பெற்றோர்கள், பிள்ளைகள் என பலரும் கலந்து கொண்டனர். 

சைக்கிள் ஓட்டப்போட்டி, தலையணைச்சமர், மிட்டாய் ஓட்டம், தேங்காய் துறுவுதல், கனுசுற்றி ஓடுதல், யானைக்கு கண் வைத்தல், பலூன் ஊதி உடைத்தல், போட்டி, எறிபந்து வீசுதல், கயிறு இழுத்தல் போட்டி, முட்டி உடைத்தல், ஊசிக்கு நூல் கோர்த்தல், கரண்டியால் பால் குடித்தல், பலூன் நடன ஆடுதல் போன்றன பல போட்டிகள் நடைபெற்றன. 

இந்நிகழ்வல் அம்பாறை மாவட்ட இலங்கை மின்சார சபையின் பிரதான பொறியியலாளர் ஏ.எம். ஹைக்கால் தொழிநுட்ப உத்தியோகத்தர் வில் பிரிடா உட்பட பலர் அதிதிகளாக கலந்து கொண்டனர். இதன்போது சைக்கிள் ஓட்டப்போட்டியில் ஜீ.எல். தர்மசேன முதலாம் இடத்தையும், சனத் அனுரத்த இரண்டாம் இடத்தையும், ஜானக்க தினேஸ் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.  இவ்விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பெறுமதியான பரிசில்களும் வழங்கப்பட்டன. 










SHARE

Author: verified_user

0 Comments: