23 Apr 2016

ஏறாவூர் நகர அபிவிருத்திக் குழுக் கூட்டம்

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகர பிரதேசத்துக்கான அபிவிருத்திக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை பிற்பகல் ஏறாவூர் நகர பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள், ஏறாவூர் நகர சபையின் ஊடான அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் உள்ளிட்ட பிரதேச மட்ட பல்வேறு அபிவிருத்திகள் பற்றி இக்கூட்டத்தில் முன்மொழிவுகள் மேற்கொள்ளப்பட்டு வரைவுத் திட்டங்களும் அங்கீகரிக்கப்பட்டன.

இக்கூட்டத்தில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அலி ஸாஹிர் மௌலானா, மகாண சபை உறுப்பினர்களான ஷிப்லி பாறூக், எம்.எஸ். சுபைர், பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மத் ஹனீபா, கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் செய்னுலாப்தீன் ஹிதாயத்துல்லாஹ்  உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.




SHARE

Author: verified_user

0 Comments: