27 Apr 2016

பாலியல் துஷ்பிரயோகம் பொலிஸ் புலனாய்வாளர்கள் இருவருக்கும் மே 10 வரை விளக்கமறியல்

SHARE
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி - கர்பலா பிரதேசத்தில் 24.04.2016 இரவு பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட
பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்;தர்கள் இருவரையும் எதிர்வரும் மே 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராஜா உத்தரவிட்டார்.

இது தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில்  கைது செய்யப்பட்ட இருவரும் காத்தான்குடிப் பொலிஸாரினால் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த இரு பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர்களில் ஒருவர் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலைப் பொலிஸ் பிரிவிலும் மற்றவர் கல்கிஸைப் பொலிஸ் பிரிவிலும் புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

இவர்கள் குறித்த பெண்ணை முச்சக்கர வண்டியொன்றில் ஒன்றில் ஏற்றி கர்பலா பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதான குற்றச்சாட்டில் கைது திங்களன்று கைது செய்யப்பட்டு செவ்வாய் பிற்பகல் நீதிபதி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டிருந்தனர்.

பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளானதாக கருதப்படும் இரு பிள்ளைகளின் தாயான 38 வயதுடைய பெண், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: