மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட வலைவாடி பிரதேசத்தில் மீள் குடியேற்றப்பட்ட சுமார் 30 சிங்கள குடும்பங்களுக்கு நேற்று (02) உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
கோரளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.தெட்சணகௌரி தினேஷ் தலைமையில் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சசிகுமார், மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான க.ஜெகதீஸ்வரன், எஸ்.மோசஸ்,ஜே.ரெய்வதன், கிராம உத்தியோகத்தர் ரி.குணபாலன் ஆகியோரும் உலர் உணவுப் பொருட்களை மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கு வழங்கினர்.
1986ஆம் ஆண்டிலிருந்து வாழைச்சேனை வலைவாடி பிரதேசத்தில் வசித்து வந்த இம் மக்கள் 1996 இல் இடம் பெயர்ந்து மீண்டும் 2015 ஆம் ஆண்டில் மீள் குடியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment