30 Mar 2021

களுதாவளை FESDA அமைப்பினால் வம்மியடியூற்று வாணி வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

SHARE

களுதாவளை FESDA அமைப்பினால் வம்மியடியூற்று வாணி வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளையிலிருந்து இயங்கிவரும் FESDA எனும் அமைப்பினால் போரதீவுப்பற்றுக் கல்விக்கோட்டத்திற்குட்பட்ட மட்.பட்.வம்மியடியூற்று வாணி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஒரு தொகுதி கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை அன்றயதினம் பாடசாலை மாணவர் தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வும் இடம்பெற்றது.

வித்தியாலய அதிபர் .சந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவ்வமைப்பின் .கிவேதன், நா.குகேந்திரன், கோட்டக்கல்விப் பணிப்பாளர் .அருள்ராசா,  மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.














SHARE

Author: verified_user

0 Comments: