28 Jan 2021

மட்டக்களப்பு சுகாதார அலுவலகத்தினால் 95பேருக்கு அன்டிஜன் பரிசோதனை ஒருவருக்கு தொற்று உறுதி.

SHARE

மட்டக்களப்பு சுகாதார அலுவலகத்தினால்  95பேருக்கு அன்டிஜன் பரிசோதனை ஒருவருக்கு தொற்று உறுதி.

மட்டக்களப்பு மாவட்;டத்தில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதையடுத்து பி சீஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி பணிமனையினால் புதன்கிழமை(27) மாலை 95 பேரிடம் கொரோனா தொற்று அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒருவருக்கு கொரோ தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவில்  இடம் பெற்ற அன்டிஜன் பரிசோதனை முகாமில் நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் கடமைபுரியும் ஊழியர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போதே ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

கோட்டைமுனை பொதுசுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் கல்லடி பொது சுகாதார பரிசோதகர் எஸ்.அமிர்தாப் உட்பட பொது சுகாதார பரிசோதகர்கள் அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.







SHARE

Author: verified_user

0 Comments: