இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் வடக்கு கிழக்கு திருமாவட்ட அவைத் தலைவரை பணியமர்த்தும் நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.
இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் வடக்கு கிழக்கு திருமாவட்ட அவைத் தலைவரை பணியமர்த்தும் நிகழ்வு சனிக்கிழமை (25) மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு கோட்டைமுனை மெதடிஸ்த ஆலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் தலைவரான தற்போதைய ஆயருமான வணக்கத்துக்குரிய ஆசிரி பி.பெரேரா, இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் எதிர்காலத்து ஆயர் எவன்சன் ஜேசப் மற்றும் வடக்கு கிழக்கு திருமாவட்ட அவைத்தலைவர் வணக்கத்துக்குரிய கலாநிதி ஜே.அருள்ராஜ் உள்ளிட்ட திருச்சபையினர்கள் தலைவர்கள், மொதடிஸ்த சபை மக்கள் ஊர்வலமான வருகைதந்துடன் புதிதாக பணியமர்த்தப்படவுள்ள வடக்கு கிழக்கு திருமாவட்ட அவைத்தலைவர் வணக்கத்துக்குரிய கலாநிதி ஜே.அருள்ராஜ் அவர்களை வரவேற்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
தொடர்ந்து விஷேட ஜெப வழிபாடுகளுடன் இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் தலைவரான தற்போதைய ஆயருமான வணக்கத்துக்குரிய ஆசிரி பி.பெரேராவினால் வடக்கு கிழக்கு திருமாவட்ட அவைத்தலைவராக வணக்கத்துக்குரிய கலாநிதி ஜே.அருள்ராஜ் பணியமர்த்தப்பட்டார்.
இந் நிகழ்வில் சபையின் பிரதித் தலைவர் மற்றும் ஜி.ஏ.சுரேஸ், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை திருமாவட்ட சபை தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
0 Comments:
Post a Comment