30 May 2019

கசிப்பு உற்பத்தி நிலையத்தை பொலிஸார் முற்றுகையிட்டதில் இருவர் கைது கசிப்பு கொள்கலன்களும், சில பொருட்களும் பொலிஸாரால் மீட்பு

SHARE
கசிப்பு உற்பத்தி நிலையத்தை பொலிஸார் முற்றுகையிட்டதில் இருவர் கைது கசிப்பு கொள்கலன்களும், சில பொருட்களும் பொலிஸாரால் மீட்பு.
மட்டக்களப்பு  - வவுணதீவு பொலிஸ் பிரிவில்  சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்டுவந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை பொலிஸார் முற்றுகையிட்டதில் இருவர் கைது செய்யப்பட்டதுடன்  கசிப்பு கொள்கலன்களும், சில பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி. நிஸாந்த அப்புஹாமி தெரிவித்தார்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றையடுத்து வியாழக்கிழமை 30.05.2019 வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி. நிஸாந்த அப்புஹாமி தலைமையில் அதிகாலை 2 மணியளவில் இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதுமண்டபத்தடி கிராம சேவகர் பிரிவிலுள்ள நொச்சண்டகல் காட்டுப் பகுதியில் பொலிஸார்; மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது 52 போத்தல் கசிப்புடன், கொள்கலன்கள், பரல்   உள்ளிட்ட கசிப்பு உற்பத்தி செய்யும் பொருட்களுடன்  சந்தேகத்தின் பேரில்  இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நிலைய பொறுப்பதிகாரி  தெரிவித்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: