மட்டக்களப்பை வந்தடைந்த மாற்றுத்திறனாளி சாதனை வீரன் மக்கீன் முஹம்மத் அலியை வரவேற்பு
சமூக நல்லிணக்கம் கருதியும். மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் தனது சக்கர நாற்காலியில் நாட்டைச்சுற்றி 1400. கிலோமீற்றர் தூர சாதனைப் பயணம் மேற்கொள்ளும் வவுனியாவைச் சேர்ந்த மக்கீன் முஹம்மது அலி ஞாயிற்றுக்கிழமை மாலை 10.02.2019 மட்டக்களப்பு ஏறாவூரை வந்தடைந்தார்.
ஏறாவூர் நகர நகரசபைக்கு முன்னால் வைத்து அவர் ஏறாவூர் ஸம்ஸம் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினால் வரவேற்கப்பட்டபொழுது ஏறாவூர் நகர மேயர் இறம்ழான் அப்துல் வாஸித் உட்பட சமூக ஆர்வலர்களும் சமுகமளித்திருந்தனர்.
0 Comments:
Post a Comment