23 Dec 2018

மாவட்ட இலக்கிய பண்பாட்டு விழா

SHARE
மட்டக்களப்பு மாவட்ட கலாசாரப் பேரவையும் மாவட்ட கலாசார அதிகார சபையும் இணைந்து மாவட்ட இலக்கிய பண்பாட்டு விழா சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழில் நுட்பக் கல்லூரி மண்டபத்தில்  இடம்பெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் மா. உதயகுமாரின் தலைமையில் மூவினங்களின் பாரம்பரியம், தொன்மை மற்றும் விழுமியங்களை வெளிப்படுத்தும் பண்பாட்டுப் பேரணி மற்றும் பல் மத கலாசார வெளிப்பாடுகள் கல்லடி விபுலானந்தா மணி மண்டபத்திலிருந்து ஆரம்பமாகி விழா நடைபெற்ற மண்டபம் வரை சென்றது.

அமர்வுகள் நான்கு அரங்குகளாக சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் இடம்பெற்றன.

மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமிருந்து கலைஞர்கள், ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்களின் படைப்புக்கள் இடம்பெற்றிருந்தன.

மூத்த கலைஞர்களுக்கான கௌரவிப்பும் நிகழ்வில் இடம்பெற்றிருந்தது.






















SHARE

Author: verified_user

0 Comments: