21 Jun 2019

வவுணதீவு பிரதேசத்தில் போதைப் பொருள் பாவனையால் சமுதாயத்திற்கும் ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி விழிப்பூட்டல் நிகழ்வு.

SHARE
வவுணதீவு பிரதேசத்தில் போதைப் பொருள் பாவனையால்  சமுதாயத்திற்கும் ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி விழிப்பூட்டல் நிகழ்வு.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள விளாவட்டவான்  கிராமத்தில் சமுர்த்தி சமுதாய அமைப்பின் ஏற்பாட்டில் போதைப் பொருட்பாவனைத் தடுப்பு தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வு  வெள்ளிக்கிழமை (21)  விளாவட்டவான் கிராமத்தில் நடைபெற்றது.

சர்வதேச புகைத்தல் மது பாவனை எதிர்ப்பு தினத்தையொட்டி  விளாவட்டவான் கிராமத்திலுள்ள  சமுர்த்தி சமுதாய அமைப்புக்கள் இணைந்து இச்செயற்பாட்டினை முன்னெடுத்தனர்.

போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்பு தொடர்பில் எழுதப்பட்ட பதாதைகளுடன், கரவெட்டி பிரதான வீதிவழியாகசென்ற மக்கள் விளாவட்டவான் மாரியம்மன் ஆலய முன்றலை வந்தடைந்து அங்குஇடம்பெற்ற விழிப்புர்வு நிகழ்விலும் கலந்துகொண்டனர்.

போதைப் பொருட் பாவனைய வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு எனும் தொனிப் பொருளுக்கு அமைவாக புகைத்தல், மது பாவனையால் மனிதர்களுக்கும் சமுதாயத்திற்கும் ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி தெழிவுபடுத்தப்பட்டது.

மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில், சமுர்த்தி சமுக அபிவிருத்தி உத்தியோகத்தர் வே.பரஞ்சோதிநாதன், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் வை.லோகேஸ்வரன், பொது சுகாதார பரிசோதகர் ந.விஜயமேனன், மாதர் அபிவிருத்தி சங்கத்தினர் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். 




SHARE

Author: verified_user

0 Comments: