27 Feb 2019

பெண்ணின் உருக்குலைந்த எலும்புக் கூடு மீட்பு

SHARE
பெண்ணொருவரின் உருக்குலைந்த நிலையில் காணப்பட்ட எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள தாளங்குடா, வேடர்குடியிருப்பு கடற் கரையோரப் புதர்களுக்கிடையே காணப்பட்ட பெண்ணின் எலும்புக் கூட்டை பொலிஸார் புதன்கிழமை (27.02.2019) மீட்டுள்ளனர்.

எலும்புக் கூடொன்று கிடப்பதாக தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் ஆளரவமற்ற கடற்கரைப் புதர்ப் பகுதியில் இந்த எலும்புக் கூடு நிலத்தின் மேற்பரப்பில் கிடப்பதைக் கண்டு மீட்டெடுத்தனர்.

இது ஒரு பெண்ணின் எலும்புக் கூடு  என்று அடையாளங் கண்டு கொண்ட பொலிஸார் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: