26 Dec 2018

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தென்னிலங்கை சிங்கள மக்கள் மத்தியில் மரியாதை - சுமந்திரன். எம்.பி

SHARE
நாட்டை சர்வதிகாரத்திற்கு இட்டுச் செல்வதனை தடுக்க வேண்டும் என்பதற்காக உச்ச நிதிமன்றத்தில் முதலாவது மனு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயாவே வழங்கினார். இதனால் தென்னிலங்கை மக்கள் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மரியாதை ஏற்பட்டு இருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 13 ஆம் ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பு அமெரிக்க மிஷன் மண்டபத்தில் செவ்வாய்கிழமை (25.12.2018) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் ஏற்பாட்டில் அதன் தலைவர் கி.சேயோன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வி;ல் சுமந்திரன் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இந்த நாட்டை குடியரசாக இருந்து முடியரசாக மாற்றுவதற்கான சதிவேலைகள் அண்மையில் நடந்தேறியபோது அதனைத் தடுத்து நாட்டினுடைய ஜனநாயத்தையும், இறைமையும் பாதுகாப்பதற்கே தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பும் இணைந்து கொண்டது.

19 வது சீர்திருத்தத்திற்கு முன்னர் ஒரு பிரதமரை பதவி நீக்க 3 காரணங்கள் இருந்தன. அதில் ஒன்று ஜனாதிபதி கையொப்பம் இட்டு ஜனாதிபதியை நீக்கி வைக்க முடியும். ஆனால் 19வது சீர்திருத்தத்தில் அந்த மூன்று காரணிகளில் ஜனாதிபதி கையொப்பம் இட்டு பிரதமரை நீக்கமுடியும் எனும் காரணி நீக்கப்பட்டது.

இந்த நிலையில்தான் அதிகாரத்துக்கு அப்பால் ஜனாதிபதியால் பிரதமர் நீக்கப்பட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை தோற்கடிப்பதற்காக பொது வேட்பாளரை ஆதரித்து வெற்றி பெறச் செய்தோம்.

இவ்வாறு தோற்கடிக்கப்பட்ட மஹிந்த  நாடாளுமன்றத்திலே பெருபான்மையை நிருபிப்பிதற்காக உறுப்பினர்கள் விலைபேசப்பட்டார்கள்.

இக்காலகட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுகிடையும் பேரம் பேசப்பட்டது. அதில் வியாழேந்திரன் எம்.பி. மஹிந்த பக்கம் சென்றிருந்தார். ஏனையவர்கள் அவர்களின் கருத்துக்கு செவிசாய்க்கவில்லை.

19 வது சீர்திருத்ததின் பிரகாரம் நான்கரை வருடம் பாராளுமன்றம் கடந்த பிற்பாடே நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும்.

இந்த விடயத்தை ஜனாதிபதி கருத்திற் கொள்ளாததால் நாம் நீதிமன்றம் சென்று ஜனநாயக்தை உறுதிப்படுத்தியுள்ளோம். இதனால் தென்னிலங்கை மட்டுமல்ல சர்வதேசத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மரியாதை உள்ளது.

இந்த நாட்டிலே இப்போதுதான் பலருக்கு அரசியல் யாப்புப் பற்றியும் அதில் என்ன கூறப்பட்டிருக்கின்றது என்பது பற்றியும் தெரிந்திருக்கின்றது,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவாக நீதிமன்றம் சென்றதாக பலர் பேசுகின்றார்கள். ஆனால் ரணில் விக்கிரமசிங்கவுக்கோ அல்லது ஐக்கிய தேசிய கட்சிக்கோ நாம் நீதிமன்றம் செல்லவில்லை. நாட்டை சர்வதிகாரப் போக்குக்கு இட்டுச் செல்லாது ஜனநாயகத்தை பாதுகாக்கவே நீதிமன்றம் சென்றிருந்தோம்.
இந்த நாடு சர்வதிகாரப் போக்கிற்கு தள்ளப்பட இருந்த நிலையில் அதனை முளையோடு கிள்ளியெறிந்த நிலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே இருக்கிறது.
இந்தநாட்டிலே தமிழ்மக்களுக்கு சுயநிர்ணய உரிமையை பெறுவதற்கு உரித்துண்டு. அதனைப பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தாகம், உணர்வு, பயணம் இருக்கின்றது”   எனத் தெரிவித்தார்

SHARE

Author: verified_user

0 Comments: