24 Dec 2018

மாகாண மொழிப் பயிற்சிப் பாசறை

SHARE
தேசிய ஒருமைப்பாடு அரச கருமமொழிகள் அமைச்சின் இரண்டாம் மொழி தமிழ் சிங்களம் முன்னேற்ற நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் தொடர்ச்சியாக மொழிப் பயிற்சிப்  பாசறைகள் இடம்பெற்றுவருதாக தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உதவிப் பணிப்பாளர்; கணேசமூர்த்தி கோபிநாத் தெரிவித்தார்.
போரதீவுப்பற்று கலாச்சார மத்திய நிலையத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற கிழக்கு மாகாண மொழிப் பாசறை பயிற்சியின் இறுதி நிகழ்வில் பங்குபற்றியோர் பரஸ்பர மொழித் தேர்ச்சிப் பிரயோக நிகழ்வுகளையும் நடாத்தினர்.

அத்துடன் பங்குபற்றியோருக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உதவிப் பணிப்பாளர்; கணேசமூர்த்தி கோபிநாத்  வெல்லாவெளி உதவிப் பிரதேச செயலாளர் எஸ். புவனேந்திரன், வளவாளர்கள், பயிலுநர்கள் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.





SHARE

Author: verified_user

0 Comments: