மட்டக்களப்பு மாவட்ட கலாசாரப் பேரவையும் மாவட்ட கலாசார அதிகார சபையும் இணைந்து மாவட்ட இலக்கிய பண்பாட்டு விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (23) மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழில் நுட்பக் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் மா. உதயகுமாரின் தலைமையில் பாரம்பரியம், தொன்மை மற்றும் விழுமியங்களை வெளிப்படுத்தும் பண்பாட்டுகள் இதன்போது அரங்கேற்றப்பட்டன.
மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமிருந்து கலைஞர்கள், ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்களின் படைப்புக்கள் இடம்பெற்றிருந்தன.
மூத்த கலைஞர்களுக்கான கௌரவிப்பும் நிகழ்வில் இடம்பெற்றிருந்தது.
0 Comments:
Post a Comment