மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவரைக் காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த திங்கட்கிழமை (17.12.2018) மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அட்டாளைச்சேனை -08 ஆம் பிரிவைச் சேர்ந்த ஏ. எல். இமாமுத்தீன் (வயது 45) என்பவரே காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி முஹம்மது றேசம்பீவி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டு மனநல வைத்திய பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் வியாழக்கிழமை மாலை 19.12.2018 அவரைப் பார்க்கச் சென்றபோது அவர் காணாமல் போயிருப்பது தெரியவந்ததாக அவர் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம்பற்றி வைத்தியசாலைப் பொலிஸாரும் வைத்தியசாலை நிருவாகமும் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment