மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணிப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (30) இரண்டு திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
வைத்தியசாலையிலுள்ள தனது மகளை பார்வையிட்டு விட்டு தும்பங்கேணி சந்தியிலிருந்து நாவற்கேணி வீதீயூடாக களுமுந்தன்வெளிக் கிராமத்திற்குச் நடந்து சென்று கொண்டிருந்து பெண் ஒருவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு இனம் தெரியாத நபர்கள் பாந்து தங்கச் சங்கிலியை இழுத்து அறுத்து எடுத்துக் கொண்டு ஓடிவிட்டதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார்.
ரீசேட் அணிந்து தலைக் கவசம் அணிந்;திருந்த அந்த இருவரும் குறித்த பெண்ணிடம் அருகில் சென்று தெரியாத ஒருவரின் வலாசம் கேட்டுள்ளனர் அதற்கு பெண் எனக்குத் தெரியாது என்றுள்ளார். பின்னர் பாய்ந்து கழுத்தில் அணிந்திருந்த 2 பவுண் நிறையுடைய தங்கச் சங்கிலியை பறித்தெடுத்துக் கொண்டு ஓடியுள்ளனர். இவ்விடையம் தொடர்பில் குறித்த பெண் வெல்லாவெளி பொலிசில் முறைப்பாடு தெரிவித்துள்ளார்.
இதனிடையே செவ்வாய்கிழைமை (30) இரவு அதே நாவற்கேணி எனும் இடத்தில் உள்ள ஆட்டுப் பண்ணை ஒன்றில் ஆடு ஒன்றை இனம் தெரியாத நவர்கள் களவாடிச் சென்றுள்ளதாக அதன உரிமையாளர் தெரிவித்தார்.
இப்பகுதியில் மிக அண்மைக்காலமாக ஆடுகள், மாடுகள், நீர் பம்பிகள், தங்க ஆபரணங்கள் என்பன களவாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment