16 Nov 2018

பாராளுமன்றம் சற்று முன்னர் கூடியது.

SHARE

இதனை அடுத்து ஆளும் தரப்பு பாராளுமனற உறுப்பினர்கள் அமளி துமளியில் தற்போது ஈடுபட்டுள்ளனர்
மேலும், எதிர்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆசனங்களில் அமர்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். 


இந்நிலையில் பாராளுமன்ற அமர்வுக்காக இன்று (16) வருகை தரும் உறுப்பினர்கள் பாதுகாப்பு பரிசோதனைகளின் பின்னர் அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். 

பாராளுமன்றத்தில் ​நேற்று கூடிய போது அமைதியற்ற சூழ்நிலை தோன்றியதுடன் அங்கு கைகலப்பு ஏற்பட்டது. 

மேலும் கூரிய ஆயுதங்களுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் காணடப்பட்டமையால் இன்று சபை அமர்வுக்காக வருகை தரும் உறுப்பினர்கள் பாதுகாப்பு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



SHARE

Author: verified_user

0 Comments: