மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமான முறையில் அகழ்வை மேற்கொண்ட இரண்டு உழவு இயந்திரங்களையும், அனுமதியின்றி மண் அகழ்வை மேற்கொண்ட பெக்கோ கனரக வாகனம் ஒன்றையும் தாம் புதன்கிழமை 31.10.2018 கைப்பற்றியதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
கோழியனாறு, முள்ளாமுனை பிரதேசத்தில் மண் ஏற்றப்பட்ட நிலையில் இழுவைப் பெட்டியுடன் கூடிய இரண்டு உழவு இயந்திரங்களும், பெக்கோ வாகனம் ஒன்றையும் கைப்பற்றியதோடு அவ் வாகனங்களின் சாரதிகளையும் கைது செய்ததாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி. நிஸாந்த அப்புஹாமி தெரிவித்தார்.
பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையில் உதவி பொலிஸ் பரிசோதகர் ஆரியசேன, பொலிஸ் உத்தியோகத்தர்களான பி. புனிதகுமார், வை.வி. கஷீர், ஆர். நந்தராஜபக்ஸ, எஸ். மனோகரன், எம். சாஜஹான் ஆகியோரிணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
கைப்பற்றப்பட்ட வாகனங்களை, நபர்களையும் மட்டக்களப்பு நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வவுணதீவு பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment