7 Nov 2018

மீண்டும் ஒரு தாழமுக்கம் உருவாகும் சாத்தியம் - பாசிக்குடாவில் 342.3 அதிக மழை வீழ்ச்சி பதிவு.

SHARE

மீண்டும் ஒரு தாழமுக்கம் உருவாககும் சாத்தியம் - பாசிக்குடாவில் 342.3 அதிக மழை வீழ்ச்சி பதிவு.
இலங்கைக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது தற்போது மேற்குத் திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் தற்போது நிலவிக்கொண்டிருக்கும் மழைகொண்ட காலநிலை வியாழக்கிழமை (08) முதல் குறைவடையும் என எதிர் பார்க்கப்படுகிறது. 

என வானிலை அவதான நிரலயத்தின் மட்டக்களப்பு மாவட்ட நிலையப் பொறுப்பத்திகாரி கே.சூரியகுமாரன் புதன்கிழமை (07) தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்…

தாழமுக்கமானது எதிர்வரும் 9 ஆம் திகதி தென்கிழக்கு வங்காளவிரிகுடா கடல் பிராந்தியத்தில் அந்தமான் தீவிற்கு அண்மையில் உருவாகும் சாத்தியமுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறு இருக்க மட்டக்களப்பு மாவட்டத்தின் புதன் கிழமை (07) காலை 8.30 மணிவரையில் மட்டக்களப்பு நகர்ப் பகுதியில் 145.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், நவகிரிப் பகுதியில் 59.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், தும்பங்கேணிப் பகுதியில் 80.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், மைலம்பாவெளிப் பகுதியில் 187.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பாசிக்குடாவில் 342.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உன்னிச்சைப் பகுதியில் 61.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், வாகனேரிப் பகுதியில் 288.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உறுகாமம் பகுதியில 94.6 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், கட்டுமுறிவுப் பகுதியில் 139.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், கிரான் பகுதியில் 290.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், கதிரவெளிப் பகுதியில் 153.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பதிவாகியுள்ளதாக வானிலை அவதான நிரலயத்தின் மட்டக்களப்பு மாவட்ட நிலையப் பொறுப்பத்திகாரி கே.சூரியகுமாரன் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாக தொடர்ந்த மழை பெய்து வருகின்றது. இதனால் பல கிராமங்களிலுள்ள உள்வீதிகள் மழை நீரில் மூழ்கியுள்ளதோடு, உள்ளுர் போக்குவரத்துக்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளன.

இவற்றைவிட அண்மைக்காலமாக மழையின்றி காய்ந்து வரண்டுபோய் கிடந்த சிறிய குழங்கள் மழை நீரில் நிரம்பியுள்ளதுடன், வாய்க்கால்கள், குட்டைகள், ஏரிகளும், நிரம்பிக்காணப்படுகின்றன.








SHARE

Author: verified_user

0 Comments: