22 Oct 2018

பொறியியல் பீடத்தில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்த மாணவர்களிற்கு பொறியியலாளர் நியமனம் பெறும் சிக்கலை அமைச்சர் மனோ கணேசன் தீர்த்து வைத்துள்ளார்.

SHARE
தென்கிழக்குப் பல்லைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்த மாணவர்களிற்கு பொறியியலாளர் நியமனம் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் நிலையினை அமைச்சர் மனோ கணேசன் நேரடியாக தலையிட்டு தீர்த்துவைத்தார். 
இலங்கை பொறியிலாளர் சேவையில் பொறியலாளர் தரம் 3 இற்குபொறியிலாளர்களை இணைத்துக் கொள்வதற்கு போட்டிப் பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்திருந்தும் குறித்த பதவிக்கு நியமனத்தை பெறமுடியாத சிக்கல் நிலையினை முகம் கொடுத்திருந்த தென்கிழக்குப் பல்லைக்கழகத்தின்  பொறியில் மாணவர்கள் தங்களுடையசிக்கல் நிலையினை தேசியஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகருமமொழிகள் அமைச்சின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இணைப்பாளர் கணேசமூர்த்தி கோபிநாத் ஊடாக தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தனர். 

அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் உடனடியாக தொடர்பு கொண்டு நிலையினை எடுத்துக்கூறி மேற்கொண்ட துரித செயற்பாட்டின் காரணமாக குறித்த பரீட்சையில் சித்தியடைந்தமைக்கான பதவி நியமனம் தென்கிழக்குப் பல்கலைக் கழகம் இலங்கை பொறியியலாளர் நிறுவனத்தில் (ஐநுளுடு) பதிவுசெய்யப்பட்டவுடன் வழங்கப்படும் என பொதுச்சேவை ஆணைக்குழு உறுதியளித்துள்ளது. 

தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் 2011 ஆம் ஆண்டு பொறியியல் பீடம் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் இம்முறை இச்சிக்கலின் ஊடாக பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் தமிழ் மாணவர்களாக காணப்பட்டிருந்தனர். அத்தொடு இவ்வாறானதொரு தீர்வுகிடைத்திருக்காத பட்சத்தில் மீண்டும் இலங்கை பொறியிலாளர் சேவையில் பொறியலாளர் தரம் 3 இற்குபொறியிலாளர்களை இணைத்துக் கொள்வதற்குபோட்டிப் பரீட்சைக்குத் தோற்றி தகுதியை பெறும் சந்தற்பத்திலேயே அவர்கள் குறித்த நியமனத்தைப் பெற்றுக் கொள்ளக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கும் என்பது குறிப்படத்தக்கவிடயமாகும்.

குறித்த பிரச்சினைக்கு முகம்கொடுத்திருந்த பொறியியல் பட்டதாரிகளிற்கான நியமனம் கடந்த 08.10.2018 அன்று வழங்கப்பட்டதாக நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கணேசமூர்த்தி கோபிநாத் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: